Vinaora Nivo SliderVinaora Nivo SliderVinaora Nivo SliderVinaora Nivo SliderVinaora Nivo SliderVinaora Nivo SliderVinaora Nivo SliderVinaora Nivo SliderVinaora Nivo SliderVinaora Nivo Slider

பரசிவ வணக்கம்


அங்குஇங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய்,

ஆனந்த பூர்த்திஆகி,

அருளொடு நிறைந்தது எது? தன்அருள் வெளிக்குளே

அகிலாண்ட கோடிஎல்லாம்

தங்கும் படிக்குஇச்சை வைத்து,உயிர்க்கு உயிராய்த்

தழைத்ததுஎது? மனவாக்கினில்

தட்டாமல் நின்றதுஎது? சமயகோ டிகள்எலாம்

தம்தெய்வம் எம்தெய்வம்என்று

எங்கும் தொடர்ந்துஎதிர் வழக்குஇடவும் நின்றதுஎது?

எங்கணும் பெருவழக்காய்,

யாதினும் வல்லஒரு சித்துஆகி,இன்பமாய்,

என்றைக்கும் உள்ளதுஎது?மேல்

கங்குல்பகல் அறநின்ற எல்லைஉளது எது?அது

கருத்திற்கு இசைந்ததுஅதுவே;

கண்டன எலாம்மோன உருவெளியது ஆகவும்

கருதிஅஞ்சலி செய்குவாம்.

-தாயுமானவர்.